கடலூரில் சேத்தியாத்தோப்பு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Aug 27 2018 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே, அள்ளூர் கட்டுக்கரை முத்து மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, முன்னதாக கடந்த இருநாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட வழிமுறைப்படி, புனித நீர் கலசம் கோபுர கலசங்களில் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.