திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகாகும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Aug 16 2018 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் முக்கிய நிகழ்ச்சியான, மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்று, அதன் நிறைவாக இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.
மூலவர் வெங்கடாஜலபதிக்கு மகா அபிஷேகம் நடைபெற்ற நேரத்தில், கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. கும்பத்தில் இருந்து ஜீவசக்தி, மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மாலை, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்பசாமி மட்டும் கருட வாகனத்திலும் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.