திருச்சியில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் : பெண்களுக்கு சாட்டையடி கொடுத்தும் வழிபாடு
Aug 14 2018 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தங்கள் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பெண்களுக்கு சாட்டையடி கொடுத்தும் வழிபாடு நடத்தினர்.
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில், குரும்பர் இனமக்களின் தெய்வங்களான, அருள்மிகு சென்னப்பசுவாமி, மகாலட்சுமி அம்மாள், பீரேஷ்வரசுவாமி, அகோர வீரபத்திரசுவாமி, ஏழு கன்னிமார்கள், பாப்பாத்தி அம்மன் மற்றும் காவேரியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஆலய பூசாரி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் ஊத்துப்பட்டி குரும்பகவுண்டர் சேர்வை ஆட்டம், ஆண்டவர்கோவில் அன்புமேடு தேவராட்டம் ஆகியவை நடைபெற்றது. அப்போது, பெண்களுக்கு சாட்டையடி வழிபாடும் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு பொங்கல் வைத்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.