விருதுநகரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா : 5 கருட சேவை நிகழ்ச்சி
Aug 10 2018 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வான ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில், ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீ வில்லிபுத்தூரில், ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப் பூரம் அன்று நடைபெறும் தேர்த் திருவிழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்த்த நிகழ்ச்சியாக கருதப்படுவது, ஐந்து கருட சேவை நிகழ்ச்சி. 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் திருநாளான நேற்று இரவு, ஐந்து பெருமாள் கருட வாகனத்திலும், ஸ்ரீஆண்டாள் ரெங்க மன்னார், அன்ன வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கருட வாகனத்தில் வரும்போது சுவாமி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்தனர். கருட சேவை நிகழ்ச்சியின் போது பெண் பக்தர்கள் கோலாட்டம் அடித்து தெய்வங்களை வரவேற்று வழிபட்டனர்.