நெல்லையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா : சிருங்கேரி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட புதிய வெண்கல அன்னை சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்
Aug 10 2018 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக சிருங்கேரி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட புதிய வெண்கல அன்னை, சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் வரும் அக்டோபர் மாதம் மகா புஷ்கர விழா கொண்டாடப்படவுள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா அக்டோபர் 11 அன்று தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்காக அன்னை தாமிரபரணிக்கு புதிதாக புனித சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னையின் திருவுருவச்சிலை, அகத்தியர் சிலை ஆகியவை ரதத்தில் அலங்கரிக்கப்பட்டு இன்று நெல்லை வந்தடைந்தது.
பாளையங்கோட்டையில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் இந்த சிலைகளுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.