கன்னியாகுமரியில் ஔவையார் அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய் கிழமை கொழுகட்டைகள் தயாரித்து பெண்கள் வழிபாடு : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Jul 18 2018 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் கேரளாவிலும் பிரசித்துபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே உள்ள ஔவையார் அம்மன் கோவிலில், ஆடி முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, கொழுகட்டைகள் தயாரித்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
தமிழகம் மற்றும் கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்துபெற்ற ஔவையார் அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் அருகே உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் கிழமைகளில், திருமண தடை தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், பெண்கள், தாங்களே வெண்கொளுகட்டைகள், சர்க்கரை கொளுகட்டைகள் தயார் செய்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் ஆடி செய்வாய் கிழமையான நேற்று, குமரி மாவட்டம் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்து, விதம் விதமான கொளுகட்டைகள் படைத்தது, அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து செண்பகராமன் புதூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்ட்டன.