திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை புறப்பாடு
Jul 17 2018 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வைணவத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டும் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை புறப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஆந்திரமாநிலம் திருமலை திருப்பதி மூலவர் ஸ்ரீவேங்கடமுடையானுக்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் முதலாம்நாள் வஸ்திர மரியாதை வைபவம் நடத்தப்பட்டுவருவது வழங்கம். அதன்படி, நேற்று வஸ்திர மரியாதை திருப்பதி திருமலைக்குப் புறப்பட்டுச் சென்றது. வெங்கடமுடையான், ஸ்ரீனிவாசபெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஸ்ரீபூமிதேவி தாயார், ஸ்ரீதேவி தாயாருக்கு மற்றும் உற்சவ மூர்த்திகளுக்க பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்கலப்பொருட்கள் உள்ளிட்டவை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாச மண்டபத்தில் வைத்து, பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை ஆண்டாள் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பட்டாச்சார்யார்கள் அனைவரும் இதனை சுமந்துச்சென்றனர்.