திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தம் - 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி தேவஸ்தானம் நடவடிக்கை
Jul 14 2018 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்தமாதம் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி அடுத்த மாதம் 9ம் தேதி மாலை 6 மணிமுதல் 17ம் தேதி காலை 6 மணி வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் திரு. சுதாகர் யாதவ் தெரிவித்துள்ளார்.