கடலூரில் திரௌபதி அம்மன் திருக்கோவில் தேர்த் திருவிழா : ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Jul 13 2018 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி விநாயக பெருமானுக்கும், திரௌபதி அம்மனுக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், இளநீர், பழவகைகள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், திரௌபதி அம்மன் வைக்கப்பட்டு பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்தது. இதில் திட்டக்குடி, ஸ்ரீமுஷ்னம், தொழுதுர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.