பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் 514-வது ஆனித் தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Jun 27 2018 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் திருவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9-வது நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதன்பின்னர் தேரில் சுவாமிகள் எழுந்தருளினர். நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா வடம்பிடித்து தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் தேரை நிலைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.