பழனியில் பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித்திருமஞ்சன பெருவிழா : நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்
Jun 20 2018 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனியில் அமைந்திருக்கும் பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித்திருமஞ்சன பெருவிழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆனித்திருமஞ்சன பெருவிழாவை முன்னிட்டு இன்று நடராஜருக்கும், அம்மாளுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமி அம்பாள், கணேச பெருமாள், அப்பர், சுந்தர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், தேன், பழ வகைகளைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, சுவாமிகள் ரதங்களில் வீதியுலா எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.