மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தேவியம்மன் திருக்கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பழைமைவாய்ந்த கனிமாற்று திருவிழா

Jun 9 2018 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தேவியம்மன் திருக்‍கோவிலில், ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பழைமைவாய்ந்த கனிமாற்று திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரை சிட்டம்பட்டி கிராமத்தில், ஆயிரத்து 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தேவியம்மன் திருக்‍கோவிலில், 5 ஆண்டுகளுக்‍கு ஒருமுறை களறி விழா நடைபெறுவது வழக்‍கம். அவ்வாறு நடத்தப்படும் களறி விழாவுக்‍காக ஓராண்டிற்கு முன்னதாக கனிமாற்று விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்‍கும் மதுரை வீரன் ஆலயத்தில் இருந்து, 500-க்‍கும் மேற்பட்ட ஆண்கள், கூடையில் வைக்‍கப்பட்டிருந்த பழங்களை, தலையில் சுமந்தபடியும், உடல் முழுவதும் சந்தனம் பூசியபடியும், மேளதாளம் முழங்க 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சுமந்து சென்றனர். பின்னர் பழங்களை தேவியம்மன் சுவாமிக்‍கு முன்பாக வைத்து, பூஜை செய்த பின்னர், அங்குள்ள கிராம மக்‍களுக்‍கு அவைகள் பிரித்து வழங்கப்பட்டன. கடந்த 2001- ம் ஆண்டுக்‍குப் பின்னர், இத்திருவிழா இந்த ஆண்டுதான் நடைபெறுவதால், பக்‍தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00