திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Mar 2 2018 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்போற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இவ்விழாவின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீ தேவி - பூ தேவியுடன் மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.