பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டி பெற்றோருக்கு பாத பூஜை : ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
Feb 11 2018 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டி கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சர்வதேச பள்ளியில் மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.
தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று புறவழி சாலையில் உள்ள மெட்ரிக் மற்றும் சர்வதேச பள்ளியில் பயிலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். பால், தண்ணீரால் பெற்றோரின் கால்களை கழுவி, சந்தனம், குங்குமம் பூசி வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு பெற்றோர் மலர் தூவி நெற்றியில் திலகமிட்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்தி ஆசி வழங்கினர். இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.