ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோயில் குண்டம் திருவிழா : ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்
Feb 8 2018 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் குண்டம் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட கோரக்காட்டூரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருட்கரியகாளியம்மன் கோயிலில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திருக்கொடி ஏற்றப்பட்டு தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் தலைமை பூசாரி தீக்குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீக்குண்டம் இறங்கினர்.
பழையூர், அய்யம்புதூர், கடுக்காம்பாளைம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.