ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்பு
Oct 17 2017 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து கோயில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீரு பிரசாதமாக வழங்கினார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில், சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, தேர்வு செய்யப்பட்டனர். இவர் ஒரு ஆண்டுகாலம் தங்கி பூஜை மேற்கொள்வார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கார்த்திகை மாதம் நடைதிறப்பு, ஐயப்ப பக்தர்கள் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.