பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் அமாவாசையையொட்டி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்
Jun 24 2017 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்றிரவு ஊஞ்சல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர், பட்டுசேலை உடுத்தி நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். பின்னர், தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.