ஆனி மாத பிரதோஷத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் பங்கேற்பு
Jun 22 2017 2:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆனி மாத பிரதோஷத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், தூத்துக்குடி நடராஜர் கோயிலிலும் நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த குகன் நாதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல், அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.