ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
Apr 30 2017 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வைணவ சமயத்தை தோற்றுவித்த ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில், 7-ம் நாளான இன்று, பரிமளரெங்கநாதர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி ராமானுஜர் சபை சார்பில், ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்துடன் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.