தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேருக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
Apr 30 2017 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரியகோயிலின் தேரோட்டம் மன்னர் காலத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பின்னர் தடைபட்டது. பின்னர், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மேற்கொண்ட முயற்சியால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று திருத்தேருக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 5-ம் தேதி இத்தேர் நான்கு ராஜவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.