சேலத்தில் அட்சய திருதியை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு : சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Apr 29 2017 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் அட்சய திருதியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் அட்சிய திரிதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகன் மற்றும் பெருமாள், சிவன், வினாயகர் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் சோடச உபச்சார பூஜை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாரதனை நடத்தப்பட்டது. பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.