துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 43-வது ஆண்டு அவ்வைப் பெருவிழா : அவ்வையின் பாடல்களைப் பாடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
Mar 26 2017 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் உள்ள அவ்வையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 43-வது ஆண்டு அவ்வைப் பெருவிழா நடைபெற்றது. இதில், ஆத்திச்சூடி உள்ளிட்ட அவ்வையின் பாடல்களைப் பாடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் கோவில் உள்ளது. இங்கு தமிழக அறிஞர்களைக் கொண்டு குழு அமைத்து, சமய வேறுபாடின்றி ஆண்டுதோறும் அவ்வை விழாவை நடத்தி வருகின்றனர். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, கடந்த 2005-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசின் சார்பில் இந்த பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 43-வது ஆண்டாக நடைபெற்ற அவ்வைப் பெருவிழாவில் ஆத்திச்சூடி உள்ளிட்ட அவ்வையின் பாடல்களை பாடும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.