திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சனி மகா பிரதோஷ தினம் : சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
Mar 25 2017 8:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், சனி மகா பிரதோஷ தினத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் அக்கினி தலமாகத் திகழும் திருவண்ணாலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரி நந்திக்கு, சனிமகா பிரதோஷ நாளான இன்று, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், சிறப்ப தீபாராதனையும் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று, அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயத்தின் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக இராஜகோபால சுவாமி ராஜ அலங்கார சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து யானை வாகன மண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளி ராஜவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.