காரைக்காலில் உள்ள பள்ளியில் எழுதவுள்ள மாணவர்கள், பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெறும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது
Feb 24 2017 8:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலில் உள்ள பள்ளி ஒன்றில், 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெறும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள அரசு உதவிபெறும் காரைக்கால் அம்மையார் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும், 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது பெற்றோரின் பாதம் பணிந்து ஆசிபெறும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, 15-வது ஆண்டாக நேற்று, பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெறும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் 124 மாணவர்களும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள 57 மாணவர்களும், தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்து, மலர் தூவி வணங்கினர். அப்போது, பெற்றோர் அட்சதை தூவி ஆசி வழங்கினர். இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை அட்சதை தூவி வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.