திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா கோலாகலம் - பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாட்டியக்கலைஞர்கள் பங்கேற்பு
Feb 23 2017 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவராத்திரியையொட்டி, திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது. இவ்விழாவில், உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான நாட்டியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மகா சிவராத்திரி விழாவையொட்டி, சைவ சமயத்தின் தலைமைப் பீடமான திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா நேற்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம், மற்றும் டெல்லியில் இருந்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியவில் இருந்தும் ஏராளமான நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பாரம்பரிய பெருமைமிக்க பரதநாட்டியம், குச்சுபுடி, மோகினியாட்டம், கதகளி, நாட்டிய நாடகம் உள்ளிட்டவற்றை நாட்டியக்கலைஞர்கள் அரங்கேற்றி, சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்கின்றனர். நாட்டியாஞ்சலி விழாவை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.