கார்த்திகை பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தயார் கோயிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Dec 3 2016 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தயார் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருச்சானூர் பத்மாவதி தயார் கோயிலில், கார்த்திகை பிரமேற்சவத்தின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயார், கோயில் மாட வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்த உற்சவம், கோயில் தெப்பக்குளத்தில் நாளை காலை நடைபெறவுள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.