முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் ஜெ ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட கழக அமைப்பினர் சார்பில் சிறப்பு வழிபாடு - பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் மனமுருக பிரார்த்தனை - தேனி மாவட்டம் போடியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற சிறப்பு யாகம்

Oct 25 2016 9:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா முழுமையாக குணமடைய வேண்டி, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பல்வேறு ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள், பாதயாத்திரைகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கோவில்பட்டி சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அமைச்சர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கொங்காலம்மன் கோயிலில் பிரத்தியங்கார தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து தேங்காய் மூடியில் 108 நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சாந்தரம்மன் கோயிலில் ஆயுஷ் ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், முதலமைச்சர் விரைவில் குணம் பெற வேண்டி, தண்டையார்பேட்டை பவானி ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றனர். இதில், கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருவல்லிக்கேணியில் உள்ள அகோபில மடத்தில், லட்சுமி நரசிம்மர், ஹயகிரீவர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, சமயபுரம் அருகேயுள்ள செம்பழனியில் அமைந்திருக்கும் பிரத்யங்கராதேவி ஆலயத்தில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 12 திரவியங்களைக் கொண்டு, அபிஷேகமும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதில், கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கும்பகோணம் அருகேயுள்ள உள்ளூரில் எழுந்தருளியுள்ள 16 அடி உயரம் கொண்ட விஸ்வரூப வராஹி அம்மனுக்கு மல்லிகை மாலை அணிவித்தும், 9 நெய்தீபங்கள் ஏற்றியும், மாதுளை உள்ளிட்ட பழ வகைகள், தேன்வடை உள்ளிட்டவைகளால் படையலிட்டும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஜெ ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மனமுருக வழிபட்டனர்.

சேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சுகவனேஸ்வரர் கோயிலில் மிருத்யுஞ்ஜெய சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில், பேரவை நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கருமந்துறை அருகே உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில், மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைசார்பில், ஒத்தக்கடை பகுதியில் உள்ள மஹா பிரத்யங்கரா தேவி கோயிலில், சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. அன்னதானமும் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ராமநாதபுரத்தை அடுத்த அரியமான் கடற்கரையில் உள்ள மஹா பிரத்யங்கரா கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பேரவை நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், சிறுபான்மையினர் நலப்பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சொக்கநாதபுரத்தில் உள்ள பிரத்யங்கரா தேவி ஆலயத்தில், 23 வகையான திரவியங்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருவத்திபுரம் ஸ்ரீகாங்கியம்மன் கோயிலில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு 108 அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடும் மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பழனி மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமுலை நாயகி அம்மன் கோயிலில், சோடஷ அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

நெல்லை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், நான்குநேரி வானாமாமலை கோயில் உள்ள வாராகி அம்மன், நரசிம்ம பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பிரத்தியங்கரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00