சென்னை, திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் அக்டோபர் 3-ம் தேதி ஸ்ரீவாரிபிரம்மோற்சவம் நிகழ்ச்சி தொடங்குகிறது
Sep 30 2016 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், 3ம் தேதி சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்தி வலம் வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. 7ம் தேதி கருட வாகனத்தில் உற்சவ மூர்த்தி வீதியுலா நடைபெறுகிறது. இறுதி நாளான 11ம் தேதி சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களுக்கு ஒரு லட்டு மட்டுமே வழங்கப்படும் என கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.