ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, அம்மன் கோயிலில் வழிபாடு - திரளான பக்தர்களுடன் சென்று பிரார்த்தனை
Aug 27 2016 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஹைதராபாத் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி, காணிக்கை செலுத்தினார்.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அண்மையில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், இறுதியாட்டம் வரை சென்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு வீடு, சொகுசு கார், பணம் என பல்வேறு பரிசுகள் குவிந்தன. இந்நிலையில், பி.வி.சிந்து, ஹைதராபாத் பகுதியில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி கோயிலில் பிரார்த்தனை செய்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார். அவருடன் பெருந்திரளான பக்தர்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றனர்.