உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் 28 ஆண்டுகளாக தனது வீட்டில் கிருஷ்ணஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறார்
Aug 25 2016 8:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.அகமத். இவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கடந்த 28 ஆண்டுகளாக கிருஷ்ணஜெயந்தி விழாவை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்த விழாவில் தான் மட்டுமின்றி, தன் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
இதனிடையே, டெல்லியில் உள்ள கிருஷ்ணபக்தி இயக்கமான இஸ்கான் சார்பில், அங்குள்ள ராதாகிருஷ்ணர் கோயிலில் ஜென்மாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு ராதாகிருஷ்ணரை வழிபட்டு வருகின்றனர். பஜனைப் பாடல்களும் பாடப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமான உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதேபோன்று மும்பையில் உள்ள இஸ்கான் கோயிலிலும் கிருஷ்ணஜெயந்தி விழா மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கூடி கிருஷ்ணரைப் போற்றும் துதிப் பாடல்களை இசைத்து வருகின்றனர்.