திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி பெருந்திருவிழா : சுவாமி தங்க முத்து கிடா வாகனத்திலும் அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி வெகுவிமரிசயாக நடைபெற்றது
Aug 25 2016 7:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆவணி பெருந்திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று சுவாமி, தங்க முத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி வெகுவிமரிசயாக நடைபெற்றது.
தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி பெருந்திருவிழா, கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமாள் தங்க முத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீதிருமலையச்சியம்மன் கோயில் திருவிழா, கடந்த 21-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், பெண்கள் கும்மி அடித்து அம்மனின் சிறப்பைப் பாடியும், ஆடியும் மகிழ்ந்தனர்.
வேலூர் அருகே ஸ்ரீபுரம் பொற்கோயிலின் 9-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் அஷ்டலக்ஷமி மகாயாகம் மற்றும் ஸ்ரீநாராயணி மூலமந்திர யாகம் நடைபெற்றது. இதில், ஏராளமானேர் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள நல்லமுத்து மாரியம்மன் ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தம்பிக்கலை ஐயன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து "அம்மை" அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மண்பானையில் கஞ்சி காய்ச்சி நேர்த்திகடன் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.