திருத்தணி முருகன் திருக்கோயிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
Jul 29 2016 8:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி முருகன் திருக்கோயிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் விரதமிருந்து மலைக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை தரிசித்தனர். இவ்விழாவை முன்னிட்டு, தெப்பத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல்நாளான நேற்று இரவு, மலையடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத்தில், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமான், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான், வள்ளி தெய்வானை திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது.