திருவண்ணாமலை மாவட்டம் காரணை கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்
May 27 2016 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்வு, கடந்த 9-ம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது. இந்நிலையில் 18-ம் நாளான இன்று நாடக கலைஞர்கள் பீமன், துரியோதனன் வேடம் அணிந்து, தத்ரூபமாக துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சியினை நடித்து காண்பித்தனர். இதனை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.