மாட்டுவண்டிகளில் பயணம் செய்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வழிபாடு - கிராம மக்களின் விநோத பிரார்த்தனை

May 27 2016 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 500 பேர், தங்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கத்திற்கு சென்று ரங்கநாதரை வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர்.

கரூர் மாவட்டம் ஆர்.டி. மலை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பெருமாளை குலதெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கத்திற்கு சென்று ரங்கநாதரை வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் 70 மாட்டு வண்டிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு 500-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டனர். நேற்றிரவு புறப்பட்ட கிராம மக்கள், இன்று காலை ஸ்ரீரங்கம் கோயிலை வந்தடைந்தனர். அனைவரும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, நம்பெருமாளையும், தாயாரையும் வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து, அன்னதானம் வழங்கினர். நாளை மறுதினம் மீண்டும் மாட்டுவண்டிகளில் அவர்கள் ஊர் திரும்பவுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00