திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
May 26 2016 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, பழமை வாய்ந்த ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் திருக்கோயிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கோயில் புணரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, கடந்த 24-ம் தேதி காலை யாக சாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமங்கள் நடைபெற்றன. இந்நிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.