நாகப்பட்டினத்தில் நெல்லுகடை மாரியம்மன் ஆலய ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்
May 1 2016 8:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுகடை மாரியம்மன் ஆலய ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற நெல்லுகடை மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மஹாதீபாரதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
திருவாரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை பேராலயத்தின் வருடாந்திர தேர்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.