பிரசித்திபெற்ற செம்பனார்கோவில் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக விழும் அரிய நிகழ்வு : சூரியபூஜை என அழைக்கப்படும் அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
Apr 30 2016 8:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்திபெற்ற செம்பனார்கோவில் வதான்யேஸ்வரர் ஆலயத்தில், கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியபூஜை என அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
நாகை மாவட்டம் செம்பானர்கோவிலில் அமைந்துள்ள பழமைவாய்ந்த வதான்யேஸ்வரர் ஆலயம், கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களுல் ஒன்றாகத் திகழ்கிறது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 12 நாட்கள் தொடர்ந்து, சூரிய ஒளிகதிர் காலை நேரத்தில் கருவறைக்குள் நேரடியாக விழுவது வழக்கம். அதன்படி, கடந்த சில தினங்களாக, அதிகாலை உதயத்தின் போது, சூரிய ஒளி கருவறைக்குள் நேரடியாக விழுந்தது. அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்பாளுக்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.