கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
Apr 30 2016 5:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் மஹாராஜா கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 26-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, கங்கை நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், கும்ப கலசத்திற்கு ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.