அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில், பெருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேர்பவனி : ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
Feb 7 2016 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில், பெருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூரில் சிறப்புவாய்ந்த தூய லூர்து அன்னை ஆலயப் பெருவிழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி வெகுசிறப்பாக நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், லூர்து அன்னை சொரூபம் வைக்கப்பட்டு பெருந்தேர் பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திரளானோர் பங்கேற்று கிறிஸ்தவப் பாடல்களைப்பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர்.