முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவிலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் குடமுழுக்கு விழா : கழக நிர்வாகிகளுடன், பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமியை மனமுருக வழிபட்டனர்
Feb 7 2016 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவிலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. கழக நிர்வாகிகளுடன் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோரும் சுவாமியை மனமுருக வழிபட்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவிலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. யாகசாலையில் ஆராதிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்கள் மற்றும் விமானங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில், அமைச்சர் திரு. டி.கே.எம்.சின்னையா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெற சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதேபோல், திருச்சியில் உள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. அங்கு ஆராதிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள், மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோபுர கலசம் மற்றும் விமானங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.