நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Feb 4 2016 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், வேதங்களால் பூஜிக்கப் பெற்றதும், அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சியளித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று அதிகாலை மாசி மகப்பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. சந்திரசேகர சுவாமி பஞ்சமூர்த்தி சகிதமாக எழுந்தருளி, சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாசி மகப்பெருவிழா வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.