சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நடைபெற்றது
Feb 2 2016 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளான இன்று காலை கருடசேவை நடைபெற்றது. திருவீதி உலாவந்த பார்த்தசாரதி சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். வரும் சனிக்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ளது.