ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ரெங்கராமானுஜ மகா தேசிகர் சுவாமிகளின் மங்களாசாசன வைபவம் விமரிசையாக நடைபெற்றது
Nov 28 2015 7:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ரெங்கராமானுஜ மகா தேசிகர் சுவாமிகளின் மங்களாசாசன வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், அரசு தலைமைக் கொறடா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள ஆண்டவன் ஆசிரமத்தில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக வலம்வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதன் பின்னர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் மங்களாசாசனம் கண்டருளினார். அவருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா திரு.ஆர்.மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.