ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் முன்னிலையில் நடைபெற்ற சொக்கர்பனை கொளுத்தும் நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் பெருமாளை வழிபட்டனர்
Nov 27 2015 10:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் முன்னிலையில் நடைபெற்ற சொக்கர்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர்.
பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் சொக்கர்பனை எனும் பெருந்தீப விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, 2 முறை கதிர் அலங்காரம் என அழைக்கப்படும் மூலிகை பல்லக்கில் கார்த்திகை கோபுரத்தை வந்தடைந்தார். அங்கே 20 அடி உயரத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கர்பனையை வலம் வந்தபின்னர், சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து, நம்பெருமாள் முன்னிலையில், சொக்கர்பனை தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கோஷத்துடன் பெருமாளை தரிசித்து வழிபட்டனர்.