தமிழக சிவாலங்களில் நடைபெற்ற சிறப்பு சங்காபிஷேக வழிபாடுகளில் ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Nov 24 2015 6:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சிவாலங்களில் நடைபெற்ற சிறப்பு சங்காபிஷேக வழிபாடுகளில் ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, திருக்கடையூர், பரசலூர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு ஆயிரத்து 8 சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
அரியலூரில் உள்ள ஆலந்துறையார் கோவிலில் 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் அந்த சங்குகளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
இதனிடையே ஈரோடு மாவட்டம் காரைவாய்க்காலில் உள்ள கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு கிருஷ்ணன் துளசி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் ஆயிரத்து 8 விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.