கும்பகோணம் மகாமக பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - மகாமக குளக்கரையை சுற்றியுள்ள ஆலயங்கள் மற்றும் மண்டபங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரம்
Oct 9 2015 8:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாமக பெருவிழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மகாமக குளக்கரையை சுற்றியுள்ள 16 ஆலயங்களும், மண்டபங்களும் ஒருகோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி கும்பகோணத்தில் மகாமக பெருவிழா கொண்டாடப்படவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவுக்காக கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மகாமக குளத்தை சுற்றியுள்ள ஷோடசலிங்கம் எனப்படும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர் உள்ளிட்ட 16 கோவில்கள் மற்றும் நவகன்னி மண்டபம், தீர்த்தவாரி மண்டபம் ஆகியவை ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. திருக்குளத்தின் மேல் தளம், கல்கட்டுமானங்கள், சிற்பங்கள் ஆகியவை யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம்பெற்ற பொறியாளர் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பம்ப்செட் உதவியுடன் தண்ணீரை இறைத்து சுத்தம் செய்தும், சுண்ணாம்பு, கடுக்காய், சோற்றுக்கத்தாழை, வெல்லம் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் கலவை தயாரித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் இப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொறியாளர் திரு.வி.ஆர்.குணசேகரன் தெரிவித்தார்.