பூண்டி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - மாதாவின் சொரூபம் தாங்கிய அலங்கார தேர்பவனி வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது
Aug 31 2015 9:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பூண்டிமாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாதாவின் சொரூபம் தாங்கிய அலங்கார தேர்பவனி வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பூண்டி மாதா பேராலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 மாதா சொரூபங்களில் ஒன்று இப்பேராலயத்தில் அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான கோயில் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார தேர் பவனி வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.