மகா கும்பமேளாவையொட்டி நாசிக் நகரில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் - சாதுக்கள் உட்பட ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு
Aug 29 2015 8:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா கும்பமேளாவின் 2-வது நிகழ்வாக, நாசிக் நகரில் சாதுக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கோதாவரி நதியில் புனித நீராடினர்.
வேதத்தின் அடிப்படையில் சாகா வரம் தரக்கூடிய அமிர்தம் என்ற பானத்தின் துளிகளை, திருமாலின் வாகனமான கருடன், பானையில் சுமந்து சென்று அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய 4 நகரங்களில் உள்ள ஆறுகளில் தெளித்ததாகவும், இதில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாள் நிகழ்ச்சி, நாசிக் நகரில் தொடங்கியது. இன்று 2-வது வழிபாட்டில், கோதாவரி நதியில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி, இறைவனை வழிபட்டனர். குறிப்பாக சாதுக்கள் புனித நீராடி வழிபட்டனர்.