சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தின் 43-வது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Aug 28 2015 6:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தின் 43-வது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவிருப்பதாகத் பங்குத்தந்தை அருட்திரு. B.K. பிரான்ஸிஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து, சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் நடைபெறவிருப்பதாக கூறினார். திருவிழாவின் அனைத்து நாட்களும் ஜெபமாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடைபெறும் எனவும் அருட்திரு. B.K. பிரான்ஸிஸ் தெரிவித்தார். அடுத்த மாதம் 7-ம் தேதி, அன்னை வேளாங்கண்ணியின் ஆடம்பர தேர் பவனி நடைபெறவுள்ளது.