ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் நடைபெற்ற விநோத வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Aug 4 2015 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் நடைபெற்ற விநோத வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டம் மகாதானபுரம் மகாலட்சுமி ஆலயத்தில் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ஆலயத்தில் தீமிதி விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஜப ஹோமம் மற்றும் விக்னேஷ்வர பூஜை, கலச அபிஷேகம், மகாதீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டுப்புடவைகள், 108 மூலிகைகள் பழ வகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00